SELANGOR

எம்பிஐ-யுனிசெல் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளனர்

OLEH NORHAYATI UMOR

ஷா ஆலம், ஆகஸ்ட் 23:

மந்திரி பெசார் பெறுநிறுவனம் (எம்பிஐ) மற்றும் சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) ஆகிய இரண்டு தரப்பினரும் ஜானா நியாகா நிறுவனம் சம்பந்தமாக நடைபெறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், எம்பிஐயின் தலைமை செயல் அதிகாரி ராஜா ஷாரின் ராஜா ஓத்மான் மற்றும் யுனிசெல்லின் இணை வேந்தர் பேராசிரியர் டத்தோ முனைவர் முகமட் ரிஸுவான் ஓத்மான் ஆகிய இருவரும் தங்களின் கீழ் இயங்கும் நிர்வாகங்கள் வெளிப்படைத்தன்மையான செயல்பாடுகளை கொண்டு இயங்கி வருகிறது என்றனர்.

அவர்களின் கூட்டறிக்கையில், எம்பிஐ மற்றும் யுனிசெல் எல்லா விதமான ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கியுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :