NATIONAL

நஜிப் ஏற்பாடு செய்த திடீர் செய்தியாளர் கூட்டம் நகைச்சுவையாக மாறியது

கோலா லம்பூர், செப்டம்பர் 17:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் புத்ரா வாணிப மையத்தில் இன்று மாலை ஏற்பாடு செய்த சிறப்பு செய்தியாளர் கூட்டம் மக்களின் கவனத்தை திசை திருப்ப அவசர அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தெரிவித்தது.

சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப் அம்னோவில் மீண்டும் இணைந்தது அதிர்ச்சி செய்தி அல்ல மாறாக தனது அரசியல் வாழ்க்கையில் ஓய்வு பெற்ற நிலையில் இருப்பவரே ஆகும். கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது டிவிட்டரில் “கா கா கா” என்று கேலி கிண்டல் செய்த நகைச்சுவை பார்க்கும் பொழுது இது ஒரு அதிர்ச்சி செய்தியல்ல. சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின், நஜிப் நாட்டு மக்களின் பயனான நேரத்தை வீணடித்து விட்டார் என்றார்.

”   நான் குடும்பத்தினருடன் மெது ஓட்டம் செல்கிறேன்,” என்று கேலியாக டிவிட்டரில் பதிவு  செய்திருந்தார்.

#கு. குணசேகரன் குப்பன்


Pengarang :