NATIONAL

டத்தோ ஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

தீபாவளி பண்டிகையை மலேசியா மட்டுமில்லாமல் உலகளாவிய நிலையில் வாழும் இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மீண்டும் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி பெருநாள் நல்லவை மற்றும் கெட்டவை இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டம். எந்த தடைகளையும் கடந்து இறுதியில் நல்லவை வெற்றி பெறுவதே தீபாவளி பெருநாளின் தத்துவம். நாம் ஒன்று நினைவில் கொள்ள வேண்டும், தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளர வேண்டாம்.

தற்போதைய மலேசியா நாட்டின் சூழ்நிலையில் தீபாவளி பெருநாளின் தத்துவம் மிகவும் பொருந்தும். நம்மை பலப்படுத்திக் கொண்டு தீய சக்திகளை வீரியம் மற்றும் நன்முயற்சிகளின் வழி எதிர் கொள்வோம்.

இந்த ஆண்டு தீபத்திருநாளில் உங்களோடு இருக்க முடியாத சூழ்நிலை. ஆனாலும் என்னுடைய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்த்துக்கள் எப்போதுமே மக்களோடு மட்டுமே இருக்கும்.

“எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்”

 


Pengarang :