NATIONALRENCANA PILIHAN

எனக்கான பணியில் கவனம் செலுத்துகிறேன் – என் மீதான தாக்குதலில் கவனம் செலுத்த மாட்டேன்

செபராங் ஜெயா – தனக்கெதிரான தாக்குதல்கள் மீது ஒரு போதும் கவனம் செலுத்தாமல் தனக்கு இட்டப்பணியினை செம்மையாக செய்வதிலேயே தாம் தனித்துவ கவனம் செலுத்துவதாக கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

நாட்டின் 14வது பொது தேர்தலை முன்னிட்டு தம் மீது பல்வேறு நிலையிலான தாக்குதல்களை அரசியல் எதிரிகள் மேற்கொள்வதாக கூறிய அவர் அதனையெல்லாம் தாம் ஒரு பொருட்டாக கருதாமல் நாட்டில் மாபெரும் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேலோங்க வைக்க தீவிர முனைப்புக் காட்டி வருவதாகவும் அதுவே தனது இலக்கு என்றும் அவர் கூறினார்.

நம்மிடையே வெவ்வேறான தனிப்பட்ட அரசியல் பார்வையும் சிந்தனையும் இருப்பது நிஜமாக இருந்தாலும் நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றம் என வரும் போது நாம் ஒரே சிந்தனையோடும் இலக்கோடும் நம்மை வலுப்படுத்தி அரசியல் ஆளுமையை வெளிப்படுத்திட வேண்டும் என்றார்.நம்மிடையே உயிர்ப்பிக்கும் ஆக்கப்பூர்வ சிந்தனையே நம்மை நமது இலக்கு நோக்கி பயணிக்க வைக்கும் என்றார்.

நம்மிடையே தனித்துவமான பார்வை இருந்தாலும் நாம் நமது இலக்கில் இருந்து ஒரு போதும் பின் வாங்காமல் தொடர்ந்து அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்துவதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் பினாங்கு மாநில கெஅடிலான் மாநாட்டில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இவ்வாறு கூறினார்.

மேலும்,நம்மிடையே அவ்வப்போது எழும் கருத்து வேறுப்பாடும் தனித்துவ அரசியல் பார்வையும் நிரந்தமற்றவை.அவை பேசி தீர்க்கப்படிய வேண்டியவை.அதுமட்டுமின்றி,நன் முறையில் அவை தீர்வினை நோக்கி நகரும் எனவும் கூறிய அவர் நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் ஒரே சிந்தனையோடு ஒரு இலக்கோடு கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.

 


Pengarang :