SELANGOR

குண்டர் கும்பல் 24: காவல்துறை மூன்று மாணவர்களை கைது செய்தது

ஷா ஆலம், 28 ஏப்ரல்:

காவல்துறை மேலும் மூன்று மாணவர்களை குண்டர் கும்பல் 24 உடன்  சம்பந்தப்பட்டதாக நேற்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

சிலாங்கூர் காவல்துறையின் குற்றவியல் விசாரணை பிரிவு தலைவர் , ஃபட்சில் அமாட் கூறுகையில் கைது செய்யப்பபட்ட மாணவர்கள் 16 மற்றும் 17 வயது  உடையவர்கள் என்றும் “ஓப் சன்தாஸ்” நடவடிக்கையின் கீழ் மீதமுள்ள “கேங் 24″ உடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் படலம் என்று தெரிவித்தார்.

”  காவல் ஆணையை மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்ட து என்றும் தற்போது  இந்த குண்டர் கும்பலின் தலைவனை காவல்துறை தேடி வருகின்றனர்,” என்றார்

ஃபட்சில் மேலும் கூறுகையில், இந்த கைது நடவடிக்கையோடு மொத்தம் 41 நபர்கள் குண்டர் கும்பல் 24 உடன் சம்பந்தப்பட்டதாக நேற்று  கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அனைவரும் செக்சன் 143  தண்டனைக்குறிய குறியீட்டின் கீழ் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார்..

 

 


Pengarang :