SELANGOR

தோட்டப்புற தமிழ்பள்ளி மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசின் பேருந்து கட்டண நிதி

பூலாவ் கேரி, ஜூன் 17:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வழி தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளுக்கு பேருந்து கட்டண உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி பூலாவ் கேரி கிழக்கு தமிழ்ப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாநில தோட்ட தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் வருகை தந்து மாணவர்கள் மத்தியில் எடுத்து வழங்கினார்.

ஒவ்வொரு மாணவர்களும் தலா ரிம 300 பேருந்து கட்டண உதவி நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 28 தகுதிபெற்ற மாணவர்களுக்கு இந்த உதவி நிதி சென்றடைந்தது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கணபதி ராவ் கூறினார்.

மாநில அரசாங்கம் தொடர்ந்து பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) மக்களுக்கு சென்றடைய பாடுபடுவோம் என்று உறுதி கூறினார். ஐபிஆர் திட்டங்களின் மூலம் மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து பணியாற்றிய வருவதாகவும் தெரிவித்தார். அதேவேளையில் இந்திய சமுதாயம் தனது ஆட்சிக் குழுவின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பெருமிதம் கொண்டார்.

#கேஜிஎஸ்


Pengarang :