கிள்ளான், ஜூன் 16:
சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தலைமையில் 84 ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மான்யம் ரிம775,000.00 பகிர்ந்தளிக்கபட்டது. கிள்ளான் குட்டி இந்தியாவில் அமைந்துள்ள தெங்கு கிளானா மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆலயங்களுக்கான 2-ஆம் கட்ட மானியம் வழங்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் உள்ள மாநிலங்களில் சிலாங்கூர் மாநிலம் மட்டுமே ஆலயங்களுக்கு அதிகமான மான்யங்கள் வழங்கி வருகிறது என்று கணபதி ராவ் பெருமிதம் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மாவட்ட, நகராண்மை,மாநகரட்சி மன்ற உறுப்பினர்கள், இந்திய கிராமத்து தலைவர்கள் மற்றும் இந்து சமய இயக்கங்கள், ஆலய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2013-இல் இருந்து இது வரை 89 ஆலயங்களுக்கு நிலங்களை பெற்று கொடுத்திருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது என்று கூறினார்.