கோலா லம்பூர், ஜூலை 23:
மலேசியாவின் 23-வயதுக்கு கீழ் உள்ள கால்பந்து அணி ஆசிய கால்பந்து போட்டியில் மங்கோலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளை பெற்றது.
இந்த முடிவு அணியின் பயிற்சியாளர் டத்தோ ஓங் கிம் சீயை சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது. மங்கோலியா அணியுடன் விளையாடும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து ஆண்டில் சீனாவில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் ஆறாவது நிமிடத்தில் என். தனபாலன் மூலம் முதல் கோலை போட்டது. இந்த கோலை அடுத்து ஹாரிமாவ் மூடா குழு தொடர்ந்து உற்சாகமாக விளையாடியது. இதன் பயனாக ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் ஷாஸூவான் அண்டிக் மூலம் இரண்டாவது கோலை புகுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.