NATIONAL

ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

கோலா லம்பூர், அக்டோபர் 26:

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்த ஏழு இந்தோனேசியப் பெண்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தோனேசியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஒஸ்ரினிகிதா சுபானா கூறினார்.

அந்த எழுவரின் உடல்களையும் அனுப்பி வைக்கும் செலவினை அவர்கள் பணிபுரிந்த தொழிற்சாலை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த விபத்தில் காயம் அடைந்த ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வெளியேறி விட்டனர். மேலும் ஐவர் மருத்துவர்களின் ஆலோசனைக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்

இருவர் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அந்தச் சாலை விபத்தில் 8 பெண்கள் உயிரிழந்தனர்.

#வீரத் தமிழன்


Pengarang :