SELANGOR

ஆட்சிக் குழு உறுப்பினரை பள்ளியில் நுழைய தடை, மாவட்ட கல்வி இலாகா உத்தரவு

கோலா சிலாங்கூர், நவம்பர் 21:

தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி பேஸ்தாரி ஜெயா, கோலா சிலாங்கூர்,  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் “தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளுக்கான பேருந்து கட்டண நிதி” உதவியை வழங்க வந்த ஆட்சிக் குழு உறுப்பினரான கணபதி ராவ் அவர்களையும், பேஸ்தாரி ஜெயாவின் சட்டமன்ற உருப்பினரையும்,  மற்றும் சக சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரிகளையும் கோலா சிலாங்கூர் மாவட்ட கல்வி இலாக்காவின் உத்தரவின்படி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பள்ளியின் அருகாமையில் கூடாரம் அமைத்து மாநில அரசின் நிதி உதவி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் “தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளுக்கான பேருந்து கட்டண நிதி” உதவியை ஆட்சிக் குழு உறுப்பினரான மாண்புமிகு திரு கணபதி ராவ் அவர்கள் அப்பள்ளியில் பயிலும் 46 மாணவர்களுக்கு தலா RM 13 000.00 (மாணவர் ஒருவருக்கு RM 300) எடுத்து வழங்கினார்.

இவ்வாண்டில், பள்ளி கல்வி கற்பித்தலுக்கும் மேம்பாட்டிற்க்கும் முதல் கட்ட நிதியாக  தலா RM 50 000 சிலாங்கூர் மாநில அரசு உதவி பணம் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட நிதியாக  தலா RM 30 000 வழங்கப்பட்டவிருக்கிறது.

சிலாங்கூர் மாநில அரசின் உதவி பணம் மொத்தம் RM 80 000 இப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

செய்தி தொகுப்பு

கலைவாணி விஜயன்


Pengarang :