புத்ரா ஜெயா, ஜனவரி 11:
கடந்த ஜனவரி 8-இல் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி விண்ணப்பம் செய்தார். மேல்முறையீடு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்ணப்பத்தை தனது வழக்கறிஞர் சுரேந்திரன் மூலமாக சமர்ப்பித்தார். உச்சநீதிமன்றம் 1995 விதிமுறைகளின் படி, அதிகாரம் 137-இன் வழி சுரேந்திரன் தாக்கல் செய்ததாக கூறினார். தேசநிந்தனை சட்டம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கிறது என்று தெரிந்தும் தேசிய முன்னணி இன்னும் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி வருகிறது என்றார்.
#தமிழ் அரசன்