SUKANKINI

ஷா ஆலம் அரங்கத்தை பற்றிய தவறான தகவல்களை பரப்பி, பேச்சுவார்த்தைக்கு இடையூறு செய்ய வேண்டாம்!!!

ஷா ஆலம், பிப்ரவரி 8:

சிலாங்கூர் கால்பந்து ரசிகர்கள் சில பொறுப்பற்ற தரப்பினரின் அப்பட்டமான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் வாழ் ரசிகர்கள் குழுவின் தலைவர் முகமட் ஃபைசால் வாஹீட் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரியை சம்பந்தப்படுத்தி டிவிட்டரில் செய்திகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

”   ரசிகர்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். சிலாங்கூர் கால்பந்து அணி மீண்டும் ஷா ஆலம் அரங்கத்தை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அமிரூடின் இந்த தகவல் தவறானது என்று நிரூபிக்க வேண்டும். சிலாங்கூர் வாழ் ரசிகர்கள் குழுவின் தலைவர் என்ற முறையில் இந்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம். இதனால் நமது நோக்கம் பயனற்று போய்விடும். ஷா ஆலம் அரங்கத்தை பயன்படுத்த முடியாமல் போகும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 


Pengarang :