SELANGOR

புதிய மந்திரி பெசார், நோன்பு பெருநாளுக்கு பின்னர் நியமனம் செய்யப்படுவர்?

ஷா ஆலம், மே 24:

நோன்பு பெருநாளுக்கு பின்னர் புதிய சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நியமிக்க பட உள்ளதாக டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி புதிய மந்திரி பெசார் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்து மேன்மை தங்கிய சிலாங்கூர் மன்னர், சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷாவிடம் ஒப்புதலுக்கு வழங்கப் படும் என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.

”  பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, முடிவு எடுக்க படும். அதன் அடிப்படையில் மந்திரி பெசார் வேட்பாளர் பட்டியலை சுல்தானிடம் வழங்கப் படும். இந்த நடவடிக்கை நோன்பு பெருநாளுக்கு பின்னர் நடைபெறும். மந்திரி பெசார்  வேட்பாளர் அதன் பிறகு அரண்மனையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார்,” என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.

 

 

 

 

 


Pengarang :