NATIONAL

பிடிபிடிஎன் கடனை திரும்ப செலுத்துவது பண்புடையது

சா ஆலாம்,ஜூன்29:

பிடிபிடிஎன் கடனை திருப்பி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமையோடு அஃது மிகவும் நற்பண்பும் கூட என கல்வி அமைச்சர் டாக்டர் மாஸ்லி மாலேக் தெரிவித்தார்.தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறியது போல் பிடிபிடிஎன் கடனை செலுத்துவதில் அரசாங்கம் சலுகையினை கொடுத்திருந்தாலும் கடனை பெற்றவர்கள் திருப்பி செலுத்துவது நற் பண்பின் வெளிபாடு என்றார்,
பிடிபிடிஎன் கடனை பெற்றவர்களின் ஊதியம் வெ.4000ஐ எட்டும் வரை அதனை திருப்பி செலுத்த வேண்டியதில்லை என வரையறுத்திருக்கும் நிலையில் கடனை திருப்பி செலுத்த வாய்ப்பு உள்ளவர்கள் அதனை திருப்பி செலுத்துவதே விவேகம் என்றும் அவர் கூறினார்.மேலும்,அது ஒவ்வொருவரின் கடமையும் கூட என்றார்.

எந்தவொரு நிலையிலும் கடனை பெற்றால் அதனை திருப்பி செலுத்துவது என்பது ஒவ்வொருவரின் கடமையும் அவர்கள் சார்ந்த நன்னெறி பண்புகளும் ஆகும்.அவ்வகையில் நன் சமூகத்தை சார்ந்த மலேசியர்கள் பிடிபிடிஎன் கடனை திரும்ப செலுத்துவதில் தங்களின் கடமையினை முறையாக மேற்கொள்வார்கள் எனும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.


Pengarang :