NATIONAL

மலேசியர்களின் அமோக வரவேற்பு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை காட்டுகிறது!!!

புத்ரா ஜெயா, ஜூன் 15:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சிக்கு மலேசிய மக்களின் அமோக வரவேற்பு புதிய பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி  அரசாங்கத்திற்கான ஆதரவை புலப்படுத்துகிறது என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இதற்கு முந்தைய ஆண்டுகளில் இப்படிப்பட்ட அமோக வரவேற்பு இருந்ததில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.

” பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சிக்கு அமோக ஆதரவு வழங்கி உள்ளனர். 14-வது பொதுத் தேர்தலுக்கு பிறகு மலேசிய மக்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதை இது உணர்த்துகிறது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்திற்கு மக்களின் அமோக வரவேற்பு நம்பிக்கையை கொடுத்துள்ளது. மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல் பட வேண்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

 

 


Pengarang :