SELANGOR

வான் அஸிஸா: இட்ரிஸ்ஸின் மந்திரி பெசார் தொடர்பில் எழுப்பிய குற்றச்சாட்டு தனிப்பட்ட கருத்தாகும்

புத்ரா ஜெயா, ஜூன் 19:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பதவியேற்ற அமிரூடின் ஷாரியின் நியமனம் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அங்கீகாரம் இல்லாத ஒன்று என்ற ஈஜோக் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அமாட்-இன் கருத்தில் அடிப்படையில்லை என்று கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். அமிரூடின் ஷாரியின் நியமனம் தலைமைத்துவத்தின் ஒருமித்த குரலில் எடுக்கப் பட்ட முடிவு என்றார்.

”  எந்த ஒரு பிரச்சினையும் இல்லை, அப்படி இருந்தாலும் அது டாக்டர் இட்ரிஸ் அமாட் அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்,” என்று புத்ரா ஜெயாவில் அமிரூடின் ஷாரியுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு வான் அஸிஸா பேசினார்.


Pengarang :