NATIONAL

செமினி சட்டமன்ற தொகுதி காலியானது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புத்ரா ஜெயா, ஜன.15:

செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நூர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தியது.

சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் இங் சூ லிம் இந்தத் தகவலை ஆணையத்திடம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக ஆணையத்தின் செயலாளர் டத்தோ முகமட் எலியாஸ் அபு பக்கார் கூறினார்.

ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிசான் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெறும் அன்றும் அவர் சொன்னார்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல், வாக்களிக்கும் தினம் உட்பட இடைதேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் அவர்.

கடந்த பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்டு வென்ற பக்தியார் (வயது 57) கடந்த வெள்ளிக்கிழமை காலை 4.45 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

பார்ட்டி பிரிபுமி கட்சி சார்பில் போட்டியிட்ட பக்தியார் தேசிய முன்னணி, பாஸ் மட்டும் பிஎஸ்எம் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை 8,964 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.


Pengarang :