NATIONAL

அஸ்மினை நலம் விசாரித்தார் மாமன்னர்!

கோலாலம்பூர், பிப்.6:

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா நேற்று சென்று நலம் விசாரித்தார்.

பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மினை மாமன்னர் நலம் விசாரிக்கும் காட்சி அடங்கிய இரு புகைப்படங்களை அஸ்மினின் மகள் ஃபாரா அமிரா தனது டுவீட்டரில் வெளியிட்டார்.

“ எனது தந்தை அஸ்மின் அலியின் நலத்தை நேரில் கண்டறிய மருத்துவமனைக்கு வருகை புரிந்த மாட்சிமை தங்கிய மாமன்னருக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் தெரிவித்துக் கொள்கிறோம் ” என்று அந்த டுவீட்டரில் ஃபாரா தெரிவித்துள்ளார்.

“மாமன்னரின் வருகையானது எனது தந்தை விரைவில் நலம் பெற்று நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை ஆற்றுவதற்கு பெரும் ஊக்கச் சக்தியாக அமைந்துள்ளது” என்றார் அவர்.


Pengarang :