NATIONAL

எம்ஆர்டி நிலையத்தில் பெண்மணி தாக்கப்பட்ட சம்பவம் சந்தேக நபர் கைது!

கோலாலம்பூர், பிப்.19:

செராஸ் தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஒரு பெண்மணியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

தாமான் செராஸில் உள்ள வீடொன்றில் 26 வயதுடைய அந்த ஆடவரை செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீசார் நேற்றிரவு 8.30 மணிக்கு கைது செய்தனர்.

தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற நாளை இந்த ஆடவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்.

கடந்த 14ஆம் தேதி தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையத்தின் மின் தூக்கியில் பயணித்த 48 வயது பெண்மனி ஒருவர் ஓர் ஆடவரால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியதைத் தொடர்ந்து இந்த ஆடவன் கைது செய்யப்பட்டான்.


Pengarang :