NATIONAL

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் அரசாங்கம் உறுதி !

பூச்சோங், பிப்.18:

14ஆவது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பக்காத்தான் அரசாங்கம் தீவிரமாக உழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் சில பொருளாதார நெருக்கடிகள் இருப்பதையும் அரசாங்கம் உணர்ந்துள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

“அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், அவற்றை அமல்படுத்துவதில் பல சிரமங்களை அரசாங்கம் எதிர்நோக்கி வருகிறது” என்று அவர் சொன்னார்.

எனினும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் எனத் தாம் நம்புவதாக மகாதீர் தெரிவித்தார்.


Pengarang :