SELANGOR

கிள்ளான் மூன்றாவது பால செலவினம்: மத்திய அரசு திரும்பச் செலுத்தும்

ஷா ஆலம், மார்ச் 19-

ராஜா மூடா நலா பாலம் என்றழைக்கப்படும் கிள்ளான் மூன்றாவது பாலத்தின் கட்டுமான செலவினத்தைத் திரும்பப் பெறுவதற்கு மாநில அரசு விண்ணப்பம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை பொருளாதார விவகாரத் துறை அமைச்சிடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளதாக ஊராட்சி, பொது போக்குவர்த்து மற்றும் புதுக்கிராம மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

“பால மேம்பாட்டு செலவினத்திற்கான ஒதுக்கீடு குறித்து கொள்கை அளவில் மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது” என்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்று இங் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் மற்றும் பொது போக்குவரத்து விவகாரத்தில் மத்திய , மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்ட விளக்கத்தை இங் கூறினார்.


Pengarang :