கோலாலம்பூர், மார்ச் 12-
ரந்தாவ் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் டாக்டர் ஸ்ரீராம் களமிறக்கப்படுகிறார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கெ அடிலான் கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
“அம்னோ தற்போது இன விவகாரங்களைத் தீவிரமாக பேசி வருகின்ற போதிலும், அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்ட பின்னர், இந்திய வேட்பாளரை களமிறக்குவதில் நாங்கள் இணக்கம் கண்டுள்ளோம்” என்று அன்வார் தெரிவித்தார்.
அனைத்து இன மக்களின் நன்மைகளுக்காகவும் பாடுபடும் வேட்பாளரை தாங்கள் தேர்வு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
மாநில தலைமைத்துவ மன்றம் சமர்ப்பித்த பெயர்ப் பட்டியலை நன்கு பரிசீலித்த பின்னர் மத்திய தலைமைத்துவ டாக்டர் ஸ்ரீராமை தேர்வு செய்ததாக அன்வார் கூறினார்.