புத்ரா ஜெயா, மார்ச் 28-
குடியுரிமை பெறுவதற்காக ஏழாண்டுகள் காத்திருந்த மாணவியின் விண்ணப்பம் இன்று அங்கீகரிக்கப்பட்டது.
நாட்டின் குடியுரிமையைப் பெற தான் சமர்ப்பித்த இரண்டாவது விண்ணப்பம் இறுதியில் வெற்றியடைந்ததைக் கண்டு ரோய்சா அப்துல்லா (வயது 22) என்ற அம்மாணவி மிகவும் களிப்புற்றார்.
இந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கு பெரும் பங்காற்றிய தனது வளர்ப்புத் தாயாரும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சருமான ஜுரைடா கமாருடினுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதேவேளையில், இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவு கரம் நீட்டிய ஆசிரியர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி கூறினார்.
வரும் ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தனக்கு இந்த குடியிரிமை ஓர் அற்புத பரிசு என்று ரோய்சா அகம் மகிழ்ந்தார்.