ஷா ஆலம், ஏப்.25-
சிலாங்கூரை மலேசியாவில் மட்டுமல்ல தெற்காசிய வட்டாரத்திலேயே சிறந்த பகுதியாக்க மாநில அரசு எண்ணம் கொண்டிருப்பதாக மந்திரி பெசார் அமிரிடின் ஷாரி கூறினார்.
ஆயினும், இந்த எண்ணம் ஈடேற மாநில ஆட்சிக் குழுவிற்கும் ஊராட்சி மன்றங்களுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு இருப்பது அவசியம் என்றார் அவர்.
தெற்காசிய வட்டாரத்தில் மிகச் சிறந்த பகுதியாகத் திகழ்வது என்பது ஓர் எளிதான காரியமல்ல. மாறாக, நோக்கம் நிறைவேற மிகுந்த கவனமும் மன உறுதியும் தேவை என்று அமிருடின் வலியுறுத்தினார்.
“தற்போது, நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக நாம் உருவெடுத்துள்ளோம் என்ற பெருமை கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தெற்காசிய வட்டாரத்திலும் சிறந்த பகுதியாகத் திகழ்வதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
தெற்காசிய வட்டாரத்தில் மிகச் சிறந்த பகுதியாக சிலாங்கூர் திகழ வேண்டும் என்பதோடு மலேசியாவின் தலைச் சிறந்த மாநகரமாக ஷா ஆலம் திகழ வேண்டும் என்பதே மாநில அரசின் இலக்கு என்றார் அவர்..