ஷா ஆலம், ஏப்.1:
வாகன நிறுத்துமிட அபராதத் தொகையை செலுத்தாமல் இருப்போர், இம்மாதத்தில் 20 வெள்ளி மட்டும் செலுத்தினால் போதுமானது என்றொரு சலுகைத் திட்டத்தை செலாயாங் நகராண்மைக் (எம்பிஎஸ்) அறிவித்துள்ளது.
எம்பிஎஸ் வழங்கியுள்ள இந்தச் சலுகையைப் பயன்படுத்தி வழக்கமாக விதிக்கப்படும் அபராதத் தொகைக்குப் பதிலாக இன்று தொடங்கி இம்மாத இறுதிக்குள் ஒவ்வொரு குற்றத்திற்கும் 20 வெள்ளி மட்டுமே செலுத்தினால் போதுமானது என்று இக்கழகம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது.
மெனாரா எம்பி எஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் காணப்படும் நடமாடும் முகப்பிடங்களில் பொது மக்கள் தங்களின் குற்றப் பதிவுகளை சரிபார்ப்பதுடன் கட்டணங்களையும் செலுத்தலாம் என்றும் அது கூறியது.
இச்சலுகை குறித்து மேல் விபரங்களை அறிய விரும்பும் பொது மக்கள் 03-6126 5800 என்ற எண்களில் எம்பஎஸ் தரப்புடன் அல்லது ஷாரிக்காட் சுவாஸ்தா சென்.பெர்ஹாட்டுடன் 03- 6120 5889 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.mps.gov.my என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.