SELANGOR

சிலாங்கூரில் அமைதி நீடிக்க தீவிரவாதத்தை புறக்கணிப்பீர்! – மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 27-

மாநிலத்தின் அமைதியையும் சுபிட்சத்தையும் பாதிக்கக்கூடிய தீவிரவாதப் போக்கு புறக்கணிக்கப்படுவதோடு முற்றாகத் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்றும் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
இது போன்ற பொறுப்பற்ற செயலானது மக்கள் மத்தியில் பதற்றத்தையும் அமைதியற்ற சூழலையும் உருவாக்கும் என்றார் அவர்.

“சிலாங்கூரில் பல்லாண்டு காலமாகப் பேணப்பட்டு வரும் அமைதி மற்றும் சுபிட்சம் தொடர்ந்து நீடித்திருப்பதோடு எதிர்கால சந்ததியினரும் அந்தக் கலாச்சாரத்தைத் தொடர்வது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

ஷா ஆலம் மாநகர மண்டபத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான விசாக தின கொண்டாட்டத்தில் மந்திரி பெசார் அமிருடின் ஷார் மேற்கண்டவாறு உரையாற்றினார்.


Pengarang :