NATIONAL

நோன்பு பெருநாளுக்கு முன்னரே பெல்டா உதவித் தொகை – அஸ்மின் அலி

கோம்பாக், மே 23-

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு வாழ்க்கைச் செலவின உதவித் தொகை மற்றும் வருமான முன்பணம் ஆகியவற்றை நோன்பு பெருநாளுக்கு முன்னரே பெல்டா வாரியம் வழங்கும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தமது தரப்பு பெல்டா நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக அவர் சொன்னார்.
“தற்போது இந்தக் குடியேற்றக்காரர்களுக்கு பெருநாள் அன்பளிப்பு தொகை வழங்கப்படாததால், இந்த உதவித் தொகை நோன்பு பெருநாளுக்கு முன்னரே வழங்குவதற்கு நான் முயற்சித்து வருகிறேன். இந்நிலையில் வேறு வாக்குறுதிகள் வழங்குவது நியாயமாகாது” என்றார் அவர்.

“பெல்டாவை காப்பாற்ற 6.23 பில்லியன் வெள்ளியை திரட்டுவதற்கு நாங்கள் முயன்று வருவதே இந்நிலைக்கு காரணம்” என்று அஸ்மின் விளக்கமளித்தார்.


Pengarang :