NATIONAL

விருப்பப்படி குரங்கை சுட்டதை இளைஞர் ஒப்புக் கொண்டார்

லுமுட், மே 23-

இளைஞர் ஒருவர் குரங்கைத் துப்பாக்கியால் சுட்டதற்கு சுய விருப்பமே காரணம் என்று கூறப்பட்டது.
சித்தியவானில் சில தினங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலானது.
தோட்டத்தில் பயிர்களை நாசமாக்கிய காரணத்தினால் அந்த குரங்கைத் தாம் பிடித்ததை அந்த 18 வயது இளைஞர் ஒப்புக் கொண்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ரசாருடின் உசேன் தெரிவித்தார்.

“சம்பவம் நடந்த தினத்தில் வாழைத் தோட்டத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்ததை அந்ந இளைஞர் ஒப்புக் கொண்டார்” என்று இங்குள்ள மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

 


Pengarang :