SELANGOR

மந்திரி பெசார்: மேம்பாட்டு பணிகளில் கவனத்தை செலுத்துங்கள் !!!

ஷா ஆலம், ஜூன் 13:

அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆபாச காணோளியை பகிர்ந்து கொள்வதை எல்லா தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் மாண்புமிகு அமிரூடின் ஷாரி  அறிவுறுத்தினார். இதற்கு மாறாக , மாநிலம் மற்றும் நாட்டின் மேம்பாடு கொள்கைகள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

” நமது அரசியல் கலந்துரையாடல் கொள்கை மற்றும் பண்புகள் கொண்டதாக இருக்க வேண்டும். ஒருவரை கொச்சைப் படுத்துதல் மற்றும் கேவலப்படுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர்த்து நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். இது போன்ற நடவடிக்கை எந்த வகையிலும் மாநிலம் மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கு உதவாது. நாட்டின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றால் மேம்பாட்டு பணிகளில் தீவிரம் காட்டும் சமுதாயமாக இருக்க வேண்டும்,” என்று அமிரூடின் கூறினார் .

மேற்கண்ட விவரங்களை செல்கேம் திட்டமிடல் திட்டத்தை ஜூப்லி பேராக் பல்நோக்கு மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்கள் பேசினார்.


Pengarang :