NATIONAL

விபத்தில் சிக்கியவருக்கு மாமன்னர் உதவினார்

புத்ராஜெயா, ஜூன் 26:

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா விபத்தில் சிக்கிய ஒருவருக்கு செய்த உதவி அவரது மனித நேயத்தைப் பிரதிபலித்தது. புத்ராஜெயா நோக்கிச் சென்று கொண்டிருந்த மாமன்னர், அதே வழியில் நடந்த விபத்தைக் கண்ணுற்றதும் தமது காரிலிருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு உதவினார்.

சிவப்பு நிற பெரோடுவா அல்சா கார் ஓட்டுநருக்கு மாமன்னர் உதவும் புகைப்படம் இன்று சமூக ஊடகங்களில் பரவியது.
கடுமையான காயமேதும் இல்லை என்றாலும் விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்த வாகன ஓட்டுநருக்கு மாமன்னர் ஆறுதல் கூறினார்.

“நல்ல வேளையாக விபத்தில் சிக்கிய புவான் ஜஸ்லிசா ஜமிலுக்கு பலத்த காயமேதும் ஏற்படவில்லை” என்ற வாசகம் அரண்மனை இன்ஸ்டாகிராம் படத்தில் விளக்கப்பட்டிருந்தது.


Pengarang :