SELANGOR

ஜூலை 14 ஆம் தேதி வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய மழை

ஷா ஆலாம், ஜூலை 8-

சிலாங்கூர் மாநிலம் முழுமையும் வரும் 14 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட், பெட்டாலிங் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் இந்நிலை தொடரும் என்று அந்த ஆய்வகம் தனது இணைய தளத்தில் குறிப்பிட்டது.

இப்பட்டியலில் கிள்ளான், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், காலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்யாது என்றும் கூறப்பட்டது.


Pengarang :