PBTSELANGOR

நீதிமன்றத்தில் 6 வழக்குகள் எம்டிகேஎல் நடவடிக்கை

ஷா ஆலம், ஜூலை 26-

கட்டுமான நடைமுறைகளையும் சாலை போக்குவரத்து விதிகளையும் மீறிய ஆறு விழக்குகளை கோல லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகேஎல்) நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. லாபம் ஈட்டும் நோக்கத்தில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறுபவர்களின் போக்கு வருத்தமளிப்பதாக எம்டிகேஎல் தலைவர் முகமது ஜெயின் ஹமீட் தெரிவித்தார்.

“இந்த ஆறு வழக்குகளும் தெலுக் டத்தோ நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு வழக்குகளின் விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையில் எஞ்சிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராததால் அவை நிலுவையில் இருக்கின்றன” என்றார்.

இவை தவிர்த்து, சாலை போக்குவரத்து விதிகளை மீறியவர் மீது அன்மையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :