SELANGOR

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான போலிங் போட்டி

பெட்டாலிங் ஜெயா, செப்.10-

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற அலுவலகம் ஏற்பாடு செய்த போலிங் விளையாட்டுப் போட்டியில் சுமார் 50 ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டி ஓன் உத்தாமாவில் உள்ள வங்சா போலில் நடைபெற்றது.

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹாலிமே அபு பக்கார், அப்பதவியை ஏற்று ஓராண்டு நிறைவெய்தியை முன்னிட்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
“ஊடக நண்பர்களுடனான உறவை மேலும் வலுவூட்ட இந்நிகழ்ச்சி உறுதுணையாக அமைந்தது என்று அவர் சொன்னார்.

“இச்சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது தொடங்கி இன்று வரை என்னுடைய நடவடிக்கைகளை செய்திகளாக்கி வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவர்களுடன் மேலும் நெருக்கமாகப் பழகுவதற்கு இந்நிகழ்ச்சி உதவியது” என்றார் அவர்.


Pengarang :