SELANGOR

சிலாங்கூர் சுல்தானை அவமதித்த அறிக்கை: கோர் மிங் புக்கிட் அமானுக்கு அழைக்கப்படுவார்

கோலாலம்பூர், அக்.7-

சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷாவை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக புக்கிட் அமானுக்கு பேரா ஜசெக தலைவர் ஙா கோர் மிங் செவ்வாய்க்கிழமை அழைக்கப்படுவார்.

கடந்த மாதம் ஙா கோர் மிங் சூப்பர் ரசிகர் ஃபேஸ்புக் பக்கத்தில் சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையிலான அறிக்கை வெளிவந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் குறித்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை நிறைவுபெற்றது அடுத்த கட்ட நடவடிக்கைகாக சட்டத் துறை தலைவரிடம் இவ்வழக்கு ஒப்ப்டைக்கப்படும் என்று தேசிய போலீஸ் படை துணை தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் கூறினார்.
“இந்த வ்ழக்கு குறித்து தமது வாக்குமூலத்தை பதிவு செய்ய செவ்வாய்க்கிழ்மை அன்று ஙா கோர் மிங் புக்கிட் அமானுக்கு அழைக்கப்படுவார்” என்றார் அவர்.


Pengarang :