ஷா ஆலம், அக். 14-
தேசிய விளையாட்டு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற உடற்பயிற்சி நடவடிக்கையின் போது மாநில அரசு பணியாளர்களுடன் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அளவளாவினார். உலு லங்காட் மாவட்ட நில அலுவலகத்தின் டேவான் ஜுப்ளி பேராக் உள்ளரங்கத்தில் மாநில இளையோர் மற்றும் விளையாட்டு துறை இலாகா பணியாளர்கள் தலைமையில் இந்த உடற்பயிற்சி நடைபெற்றது.
மக்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் மாநில அரசின் நோக்கத்திற்கு ஏற்ப அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெற்று இந்த உடற்பயிற்சி நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது.
மாநில அளவிலான தேசிய விளையாட்டு மாத இயக்கத்தை மந்திரிபெசார் அமிருடின் ஷாரி அதிகாரப்புர்வமாகத் தொடக்கி வைத்தார்.