புத்ராஜெயா, அக்.7-
பெட்ரோல் உதவித் தொகை திட்டம் 2020 ஜனவரி முதல் தேதி அமல்படுத்தப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நச்ய்த்தியோன் கூறினார்.
அந்தத் திட்டத்தில் பெறுநரின் வங்கி கணக்கில் சம்பந்தப்பட்ட உதவித் தொகையை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அர்சாங்கம் சேர்ப்பிக்கும் என்றார் அவர்.
வாகனம் பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு 30 வெள்ளியும் மோட்டார் சைக்கிஅள் பயன்படுத்துவோருக்கு 12 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் உடவித் தொகையாக வழங்கப்படும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாள்ர் கூட்டத்தில் நசுத்தியோன் தெரிவித்தார்.
இந்த உதவித் திட்டத்தின் வாயிலாக 2.9 மில்லியன் பேர் பயனடைவர் என்றும் அவர் சொன்னார்.