NATIONAL

‘தச் என் கோ’ சேவை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்த்து வைக்கப்படும் !!!

கோலா லம்பூர், நவம்பர் 11:

கடந்த நவம்பர் 5 இல் தோல் கட்டண முகப்பிடங்களில் நிறுத்தப்பட்ட ‘தச் என் கோ’ மதிப்பு கூட்டும் சேவை தொடர்பில் நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றனர்  என்றும் இதை நிவர்த்தி செய்ய பிளஸ் நிறுவனம் நடவடிக்கையில் ஈடுபடும் என பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

தற்போது ‘தச் என் கோ’ சேவை முகப்பில் சம்பந்தப்பட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை தீர்க்கும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனாலும், இதை நிவர்த்தி செய்ய கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. இதில் ‘தச் என் கோ’ மதிப்பை கூட்டும் சேவையை மேம்படுத்த நடவடிக்கையும் அடங்கும் என்பதை அவர் விவரித்தார்.


Pengarang :