NATIONAL

பொதுமக்களை வாக்களிக்க நினைவுறுத்தும் நகரும் அறிவிப்பு பிரிவு

பொந்தியான், நவ.15:

தஞ்சோங் பியாய் தொகுதியில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்கும்படி கோரி அறிவுப்புகளை செய்வதற்கு 8 நகரும் அறிவிப்பு பிரிவுகளை ஜோகூர் மாநில தகவல் இலாகா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு பிரிவு புதன்கிழமை தொடங்கி வெள்ளிக் கிழமை வரை மொத்தம் மூன்று தினங்களுக்கு இத்தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குறித்து அறிவிப்பை செய்த வண்ணம் இருக்கும் என்று மாநில தகவல் இலாகா துணை உயக்குநர் முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

வாக்களிக்கும் தினமான சனிக்கிழமையன்று வழக்கமாக குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பதற்காக வெளியே வருவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் இப்பீர்வு அறிவிப்பு பணியைத் தொடரும் என்றும் இது தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அமையும் என்றும் அவர் சொன்னார்.
இந்த அறிவிப்புகளின் மூலம், அதிகமான வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவர் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.


Pengarang :