NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: கோலா லங்காட் நகராண்மைகழக அந்தஸ்தை அடைந்துள்ளது !!!

ஷா ஆலம், நவம்பர் 13:

கோலா லங்காட் மாவட்ட மன்றம், நகராண்மை கழக அந்தஸ்தை அடைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி உறுதிப் படுத்தினார். கடந்த அக்டோபர் 31-இல் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சகத்தின் வழி கடிதத்தை தாம் பெற்றுக் கொண்டதை மேற்கோள்காட்டி தெரிவித்தார்.

” இதையடுத்து, சுபாங் ஜெயா நகராண்மை கழகத்திற்கும் அமைச்சரவை மாநகராட்சி அந்தஸ்தை வழங்கும் உறுதிக் கடிதத்தை வழங்க வேண்டும் என நான் எதிர் பார்க்கிறேன்.கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் மீண்டும் பரிந்துரையை செய்ய வேண்டும். மாவட்ட அந்தஸ்தை நகராண்மை கழகத்திற்கு மேம்படுத்த சில புதிய பரிந்துரைகளை தாக்கல் செய்ய வேண்டும்,” என்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் பேசினார்.


Pengarang :