SELANGOR

சிலாங்கூரின் ஆறு மாவட்டங்களில் திங்கள்கிழமை வரை இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், டிச.3-

சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களில் அடுத்த திங்கள்கிழமை (டிசம்பர் 9) வரையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய 6 மாவட்டங்களே அவை என்று மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்தது.

ஆயினும், சபாக் பெர்ணம் பகுதியில் வரும் வியாழக்கிழமை வரை வெய்யில் நீடிக்கும் என்றும் அதன் பின்னர் இடியுடன் கூடிய மழை அடுத்த திங்கள் வரை தொடரும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
இதே நிலை கிள்ளான் மற்றும் கோல லங்காட் மாவட்டங்களிலும் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானிலை குறித்து அறிய விரும்பும் பொது மக்கள் www.met.gov.my. எனும் அகப்பத்தை வலம் வரலாம்.


Pengarang :