Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari menyampaikan ucapan sembah taat setia kepada DYMM Sultan Selangor, Sultan Sharafuddin Idris Shah di Balairung Seri, Istana Alam Shah, Klang sempena Hari Keputeraan baginda ke 74. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரை திறமையோடும் சுறுசுறுப்பாகவும் இயக்க அமிருடின் உறுதிமொழி !

கிள்ளான், டிச.11-

மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் மக்களின் பிரச்னைகள் மீது கொண்டிருக்கும் பரிவுமிக்க கொள்கையை சிலாங்கூர் அரசாங்கம் முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுகிறது. சிலாங்கூர் எனும் கப்பலை துணிச்சலோடும் சுறுசுறுப்பாகவும் இயக்குவதை உறுதிசெய்ய சிலாங்கூர் மாநில அரசு சுல்தான் அவர்களை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இம்மாநிலம் சுறுசுறுப்புமிக்கதொரு கப்பலுக்கு ஒப்பானதாகும். இது பூகிஸ் மக்களின் பேழைக்கு ஈடானது. மிகவும் எளிமையானது ஆனால் மிகப் பெரிய கனவுகளைக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்குவது. ‘பிரினிசி’ என்றழைக்கப்படும் இப்பேழையின் பெயரில் இரண்டு வார்த்தைகள் இணைந்துள்ளன. ‘பிசுறு’ என்பது நல்ல மனிதர்கள் என்று பொருள்படும். ‘பினிசி’ என்பது சுறுசுறுப்பான ஒரு மீன் வகையாகும்” என்று அமிருடின் விவரித்தார்.

“நாங்கள் மேன்மைத் தங்கிய சுல்தானை மாலுமியைக் கொண்டு எத்திசைக்கும் பயணிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் உறுதிமொழி அளித்தார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா அவர்களின் 74ஆவது பிறந்த தினத்தையொட்டி இஸ்தானா ஷா ஆலமில் நடைபெற்ற விசுவாச உறுதிமொழி வழங்கிய மந்திரி பெசார் மேற்கண்டவாறு உரையாற்றினார்.


Pengarang :