கிள்ளான், டிசம்பர் 11:
சிலாங்கூர் மன்னர் சுல்தான் சராபூஃடின் இட்ரீஸ் ஷா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. அவரோடு மற்ற 91 முக்கிய பிரமுகர்களும் விருது பெற இருக்கின்றனர். அமிரூடின் ஷாரி சிலாங்கூர் அரசரின் மிக உயரிய விருதான ஸ்ரீ பாடுகா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்பிஎம்எஸ்) எனப்படும் டத்தோ ஸ்ரீ பட்டத்தை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தின் இணை வேந்தர் பேராசிரியர் டத்தின் பாடுகா டாக்டர் அன்னி இட்ரீஸ் டத்தோ செத்தியா சுல்தான் சராபூஃடின் இட்ரீஸ் ஷா (எஸ்எஸ்ஐஎஸ்) எனப்படும் டத்தோ செத்தியா அல்லது டத்தின் பாடுகா விருதை பெற இருக்கிறார் என்று அரண்மனையின் அதிகாரப் பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த விருது வழங்கும் விழா அலாம் ஷா அரண்மனையில் நடைபெற உள்ளது.