ஷா ஆலம், பிப்.11-
பெட்டாலிங் ஜெயா எஸ்எஸ்2 மேடான் பாசாரில் தரம் உயர்த்தப்பட்ட 182 வர்த்தகப் பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பாக்கார் தெரிவித்தார். இச்சந்தை பகுதியில் தற்போது கூரை, மழை நீர் தேக்க வசதி ஆகியவற்றோடு காற்றாடி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
இப்பகுதியின் அங்காடி கடைகளின் தோற்றத்தை மேம்படுத்தும் எம்பிபிஜே கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ள தரம் உயர்த்தும் நடவடிக்கையின் வழி வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று எம்பிபிஜே நிலையிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த ஆற்றிய உரையில் முகமது சாயுத்தி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 50 வசதி குறைந்த பிரிவினருக்கு 250 ரிங்கிட் பணமுடிப்பு வழங்கப்பட்டது.