ஷா ஆலம், மார்ச் 30-
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் பெரிய அளவிலான துப்புரவு நடவடிக்கையில் திடக் கழிவு மற்றும் பொது துப்புரவு நிர்வாகக் கழகம் ( எஸ்டபள்யூ கோர்ப்) ஈடுபட்டுள்ளது.
இந்நடவடிக்கை புக்கிட் டாமன்சாரா, ஜாலான் ஓஸ்மான் பொது சந்தை, பெட்டாலிங் ஜெயா, சுங்கை ரமால் டாலாம், காஜாங் மற்றும் கோலாலம்பூர் ஆகியவற்றில் மேற்கோள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்நடவடிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் அரசாங்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று அது கூறியது.
இந்நடவடிக்கை இதர மாநிலங்களிலும் குறிப்பாக அதிக பரவல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ள சிரம்பான், மஸ்ஜிட் பஞ்சோர் ஜெயா (நெகிரி செம்பிலான்), செனாவாங் ( தாமான் டேசா ஆர்க்கிட், தாமான் ஸ்ரீ பாகி சூராவ், தாமான் டேச மெலோர் சூராவ், தாமான் டேசா அங்கெரிக்) ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும் அது கூறியது.