Ketua Wanita KEADILAN, Haniza Mohamed Talha.
SELANGOR

லெம்பா ஜெயா தொகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உதவி பொருட்களைப் பெற்றன!

ஷா ஆலம், ஏப்.8-

கோவிட்-19 தொற்று பரவலால பாதிக்கப்பட்ட லெம்பா ஜெயா சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,417 குடும்பத்தினர் அத்தியாவசிய உணவு பொருட்கள் உதவியைப் பெற்றுள்ளனர் என்று வீடமைப்புத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிசா தால்ஹா கூறினார். இந்த உதவிப் பொருட்கள் வசதி குறைந்த தரப்பினர் மற்றும் தேவைப்படுவோருக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்துள்ளன என்றார் அவர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. லெம்பா ஜெயா சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இதுவரை ரிம. 70,850 மதிப்பிலான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.  அனைத்து தரப்பினரும் இந்த சோதனையான கால கட்டத்தை பொறுமையுடன் எதிர்கொள்வர் என்று தாம் நம்புவதோடு இத்தொகுதி மக்களின் நலனுக்காக தம்மால் ஆன உதவிகளைத் தாம் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :