Pasar Besar Jalan Othman di Petaling Jaya, ditutup mulai hari ini untuk proses nyahkuman. Foto MBPJ
PBTSELANGOR

ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை மீண்டும் செயல்பட அனுமதி

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5:

கடந்த மே மாதத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட ஜாலான் ஓத்மான் பொதுச் சந்தை பல்வேறு சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நாளை முதல் திறக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் (எம்பிபிஜே) மேயர் டத்தோ முகமட் சாயூதி பாக்கார் தெரிவித்தார். சந்தை திறக்கப்பட உள்ளதால் வணிக நடவடிக்கைகள் எப்போதும் போல இயங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

” எல்லா வியாபாரிகளும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். நிபந்தனைக்குட்பட்ட  நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிபி) கடைபிடிக்க வேண்டும்,” என்று தமது அறிக்கையில் முகமட் சாயூதி கூறினார்.


Pengarang :