ECONOMYHEALTHPBTSELANGOR

கோலசிலாங்கூர் நாடாளுமன்ற, புக்கிட் மெலாவத்தி, ஈஜோக் மற்றும் ஜெராம் சட்டமன்ற தொகுதிகளில் இலவச கோவிட்- 19 பரிசோதனை

ஷா ஆலம் ஜூன் 5 ;- நாளை ஜூன் 6ஆம் தேதி காலை 9,00 முதல் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள புக்கிட் மெலாவத்தி ஈஜோக் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் திங்கட்கிழமை ஜூன் 7 ன்று காலை 9.00 முதல் ஜெராம் சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு அவரவர் குடும்ப நலன் காக்க உதவும்படி அழைக்கின்றனர்.

ஜூன் 6-  ஈஜோக் தொகுதி- கம்போங் புக்கிட் பாடோங் சமூக மண்டபம்
புக்கிட் மெலாவத்தி  எம்.டி.கே.எஸ். மண்டபம், பண்டார் பாரு கோலா சிலாங்கூர்
ஜூன் 7 – ஜெராம் தொகுதி- கம்போங் புக்கிட் கூச்சிங் தெங்கா சமூக மண்டபம்

மேற்படி இடங்களில் நடைபெறும் பரிசோதனைகளில் தவறாது கலந்துக் கொள்ளும்படி கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி  அகமது, புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா சூல்கிப்ளி மற்றும் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அமாட் கூட்டாக விடுத்த அறிக்கையின் வழி கேட்டுக் கொண்டனர்.

நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று சமூகத்தில் பரவுவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறியை கொண்டிராதவர்களை கண்டு பிடிக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் அதிக அளவில்  பரிசோதனை இயக்கங்களை நடத்துகிறோம் என்றார் அவர்.


Pengarang :