NATIONAL

ஜூலை 2-இல் மேலும் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுப்பார்கள்?

கோலா லம்பூர், ஜூன் 26:

எதிர் வரும் ஜூலை 2-இல் மேலும் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்று மாமன்னர் அரண்மனை காப்பாளர் டத்தோ வான் அமாட் டாஹ்லான் அப்துல் ஹாஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 20-இல் மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பட்டியலை பெற்றுவிட்டதை அவர் உறுதிப் படுத்தினார்.

”  புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பட்டியலை மேன்மை தங்கிய மாமன்னர் ஏற்றுக் கொண்ட பிறகு அந்தப் பட்டியல் ஜூன் 22-இல் மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜூலை 22 அன்று அனைத்து புதிய அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் மாமன்னரின் அதிகாரப்பூர்வ அரண்மனையிில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்,” என்று நள்ளிரவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வான் அமாட் டாஹ்லான் அப்துல் ஹாஜீஸ் தெரிவித்தார்.


Pengarang :