SELANGOR

அமிரூடின்: நேர்மையாக கருத்தை தெரிவியுங்கள், கட்சியை வலுப்படுத்த சரியான தகவல்களை பதிவு செய்யுங்கள்

செப்பாங், டிசம்பர் 31:

கட்சியை வலுப்படுத்த சரியான தகவல்களை பதிவு செய்வதோடு தைரியத்துடன் தவறுகளை சுட்டிக் காட்டும் பண்புகளை கெஅடிலான் உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று புதிதாக கட்சியின் தலைவரால் தேர்வு செய்யப்பட்ட சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவர் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். கட்சி எதிர் நோக்கும் பிரச்னைகளை புரிந்து கொண்டும், கண்மூடித்தனமாக ஆதரவை வழங்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜெட்டாவிலிருந்து ஹாஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கெஎல்ஐஏ) தன்னை வரவேற்க காத்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அமிரூடின் இவ்வாறு கூறினார்.


Pengarang :