SELANGOR

சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டும் தகவல்களைத் தொடர்வீர்!

ஷா ஆலம், ஜன.16:

நீதி, நேர்மையைக் கொள்கையாக கொண்ட உயர்நெறி பன்புகளுடன் கூடிய கல்வியாற்றல்மிக்க சமுதாயத்தை உருவாக்கும் கடப்பாட்டுடன் டாருல் ஏசான் கழகம் (ஐடிஇ) தொடர்ந்து தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது முதல் இக்கழகம் நாட்டின் நடப்பு அரசியல் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வந்துள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷா கூறினார்.

இக்கழகம் வெளியிடும் கட்டுரைகளே பொதுத் தேர்தல் மற்றும் அடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் தரப்பினரின் அளவு கோலாக இருக்கிறது.

எனவே, போட்டியாற்றலோடு மாற்றங்களுக்குத் தயாராகவும் மலேசியா பாருவை நோக்கி செல்லும் சமுதாயத்தை சிந்திக்க வைக்கும் தகவல்களை இக்கழகம் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஐடிஇ தலைமையகத்தில் நடைபெற்ற அதன் பணியாளர்களுடனான சந்திப்பின் போது மந்திரி பெசார் மேற்கண்ட கோரிக்கையை முன் வைத்தார்.


Pengarang :